முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 எதுக்கு தரங்கனு தெரியுமா..?

ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள்.





இன்னொரு  பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது.


என் கம்யூனிஸ்டு  தோழர்  ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்புக்கு, தொகை கொடுத்துவிட்டால் வீட்டில் வரும் கேள்வி, என்னடி சம்பாதிக்கிற திமிரா ? வீட்ல கேட்கணும்னு தோணல. இதே ஆண் செய்துவிட்டு வந்து சொன்னால் அது பெருமை. சமூக கடமை. ஒரு நல்லது செய்வதற்கு கூட அவளிடம் பணம் இருந்தாலும் அதில் ஏகப்பட்ட தடைகள் உண்டு. 


என்னங்க இன்னைக்கு பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கேன் ? ஏதோ மூணு நாளா மாரு வலினு சொல்லிட்டு இருக்கா ? போய்டு வரட்டா ? என்ற கேள்விக்கு பதில் “ பார்க்கலாம்”. என்பதாக இருக்கும். இத்தனைக்கும் அடுத்த 9 கிலோமீட்டரில் தான் ஊர் இருக்கும்.  


இந்த சமூக சூழ்நிலையில் குடும்பதலைவிக்கு  மகளிர் உரிமைத் தொகை என்பதை கண்டிப்பாக வரவேற்பேன். காரணம் அது சமூக பொருளாதார சுழற்சி. பெண்களின் வாழ்வாதார அடிப்படை நம்பிக்கை கொடுக்கும் விடயம். மாதம் தோறும் அந்த ஆயிரத்தில் அவர் செஷல்ஸ் தீவில் இடம் வாங்க போவதில்லை. ஆனால் அதனை தன் குடும்பத்துக்கு செலவழிப்பார். என்ன செலவழிப்பார் ? தின்பண்டங்களாக இருக்கலாம் ? சீட் கட்டலாம் ? பேருகால மகளுக்கு மருமகளுக்கு நல்ல உணவுக்காய் இருக்கலாம்.. ? நல்ல துணிமணிக்காய் இருக்கலாம்... ? எல்லாமே இங்கே சமூகத்தில் தான் உழல போகிறது அந்த பணம்.


இல்லையில்லை அந்த ₹1000த்தில் வேலை வாய்ப்பு, தொழில் என்றெல்லாம் சொல்பவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தயவு செய்து பக்கத்து வீடு வாட்சப் புரட்சி வசனம் மட்டுமே உலகென இருக்காதீர்கள். சமூகத்தை கண் திறந்து பாருங்கள் என்பேன். இந்த சமூக சாதீய பெண்ணடிமை சிக்கல் தீர இதெல்லாம் வழி முறைகள் என்பேன். நான் வரவேற்கிறேன். அவர்களுக்கு மிக்சி கொடுத்தது கிரைண்டர் கொடுத்தது, கல்விக்கு பணம் கொடுத்தது என எல்லாவற்றையும் வரவேற்கிறேன். 


ஏனெனில் ரஞ்சித் ஒரு வசனம் சொல்லுவார் “ எங்களுக்கு ஓட்டு இருக்குனு தானே உசுரோடு வச்சிருக்கிங்க இல்லாட்டி கடல் தாண்டி போட்ற மாட்டிங்க" என்பார். அதே தான் பெண்களுக்கும். 

ஏதோ அரசு தாலிக்கு தங்கம், அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரில சேர்ந்து படிச்ச மாதம் ₹1000, பேறு கால உதவி என செய்வதால் மட்டுமே அமைதியாக இருக்கிறார்கள். இல்லையேல் இப்பவும் சமூகத்திற்கு கள்ளிப்பால் கொடுக்க தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...